<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-952181897718682439</id><updated>2011-10-15T20:41:26.783-07:00</updated><title type='text'>மனிதக்குரங்கின் அமானுஷ்ய அனுபவங்கள்</title><subtitle type='html'>சத்தியமா நடந்துது மாமு...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>16</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-4118858415779206064</id><published>2011-03-31T18:40:00.000-07:00</published><updated>2011-03-31T18:42:13.349-07:00</updated><title type='text'>மனிதக் குரங்கின் தேர்தல் வாக்குறுதிகள்</title><content type='html'>தேர்தல் நேரமாச்சே, எல்லாக் கட்சிகளும் வாக்குறுதிகளை சும்மா அள்ளி விட்டுக்கிட்டு இருக்காங்க. டிவி போய் லேப்டாப் வந்துடுச்சு. ஆஹா நம்ம தமிழகம் எவ்வளவு வேகமா விஞ்ஞான வளர்ச்சி அடஞ்சிகிட்டிருக்கு. அதை விட என்னை மிகவும் கவர்ந்த வாக்குறுதிகள் எல்லாம் நம்ம சொந்தங்களை பற்றியது தான். அதாங்க, இலவசமா ஆடு, மாடு எல்லாம் குடுக்க போறாங்களாம். சரி போன தடவை நம்ம பேருல எவனும் டிவி யை வாங்கிட்டு போயிடக்  கூடாதுன்னு  டிவியை வாங்கிட்டு வந்து வெச்சுட்டோம். இந்த தடவை ஆடு மாடு எல்லாம் வாங்கி எங்க வெக்கறது? சரி, எது எப்படியோ ஆகட்டும் நானும் மனிதக் குரங்கு முன்னேற்ற கழகம் ஆரம்பிக்க்கறதுனு முடிவு பண்ணிட்டேன். வாக்குறுதிகள் எல்லாம் ரெடி இனி குரங்குகளை சேக்க வேண்டியது தான் பாக்கி . நம்ம வாக்குறுதிகள் எதுவும் லேப்டாப், பஸ் பாஸ் இந்த மாதிரி எல்லாம் இருக்காது. முற்றிலும் இயற்கை சார்ந்த விஷயங்கள் தான்&lt;br /&gt;1  . தண்ணீர் வசதி உள்ள கிராமப்புற மக்களுக்கு வீட்டுக்கு ஒரு நீர் யானை கொடுப்போம்&lt;br /&gt;2 .  தண்ணீர் வசதி கம்மியாக இருக்கும் கிராமங்களில் வீட்டுக்கு ஒரு ஒட்டகம் கொடுப்போம்&lt;br /&gt;3 .  தண்ணீர் வசதியைப் பொறுத்து வீட்டுக்கு ஒரு திமிங்கலம், சுறா மீன், வஞ்சிரம் இல்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு கோல்ட் பிஷ் கொடுப்போம்&lt;br /&gt;4 . விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய உதவியாக வீட்டுக்கு ஒரு யானை கொடுப்போம்&lt;br /&gt;5 . கிராம மற்றும் நகர மக்களுக்கு வீட்டு காவலுக்கு நாய்கள் கொடுப்போம்&lt;br /&gt;6 . பத்து வயதுக்கு உள்பட்ட சிறார்களுக்கு பொமரேனியன் நாய்களும், பத்து வயது மேற்பட்ட சிறுவர்களுக்கு அல்சேஷன் நாய்களும்  கொடுப்போம்&lt;br /&gt;7 . மின் பற்றாக்குறை காரணமாக இருட்டில் மூழ்கி இருக்கும் கிராமங்களில் லைட் வசதி செய்து கொடுப்பதற்காக மின் மினி பூச்சி பண்ணைகள் அமைப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் கற்பனை தான் ஆனால் ஒன்னு மட்டும் உண்மை. இன்னும் சில வருடங்களில் நம்ம மக்களுக்கு அறிவு புகட்ட வீட்டுக்கு ஒரு மனிதக் குரங்கு கொடுக்க வேண்டி இருக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-4118858415779206064?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/4118858415779206064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=4118858415779206064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/4118858415779206064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/4118858415779206064'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2011/03/blog-post.html' title='மனிதக் குரங்கின் தேர்தல் வாக்குறுதிகள்'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-2556671122711253431</id><published>2010-12-03T19:57:00.000-08:00</published><updated>2010-12-03T20:02:48.192-08:00</updated><title type='text'>வாழ்ந்து தொலைப்போம்</title><content type='html'>&lt;a href="http://www.erodekathir.com/2010/12/blog-post.html"&gt;http://www.erodekathir.com/2010/12/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : ஈரோடு கதிர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-2556671122711253431?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/2556671122711253431/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=2556671122711253431' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/2556671122711253431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/2556671122711253431'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2010/12/blog-post.html' title='வாழ்ந்து தொலைப்போம்'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-6787170244669722770</id><published>2010-10-29T20:53:00.000-07:00</published><updated>2010-10-29T22:15:06.307-07:00</updated><title type='text'>ஆப்பிலிருந்து காப்பாற்றிய பாம்பு</title><content type='html'>அது என்னமோ தெரியலை நமக்கும் பாம்புகளுக்கும் அப்படி ஒரு ராசி. என்ன பாம்பு என்றே தெரியாமல் பிலிம் காட்ட கையில் பிடித்த போதெல்லாம் கூட கடித்ததில்லை. ஒரு முறை கடவுளே பாம்பு வடிவில் வந்து அருள் புரிந்த சம்பவம் நடந்தது. எங்கள் மென்பொருளை புதிதாக இம்ப்ளிமென்ட் செய்திருந்த ஒரு வங்கியில் வருடக் கணக்கு முடிக்கப் பட வேண்டும். வங்கி இருந்தது தானாவில்.கட்டிடத்துக்கு பின்னால் ஒரே புதரும் செடியுமாக இருக்கும். போதாக் குறைக்கு ஒரு 1௦௦ மீட்டர் தொலைவில் ஒரு மூடப் பட்டிருந்த துணி மில் வேறு. அங்கு கண்ணாடி எல்லாம் உடைந்து, சுவர் எல்லாம் பாழ் அடைந்து பேய் பங்களா மாதிரியே இருக்கும். ராத்திரி ஆனால் நிலா வெளிச்சத்தில் வௌவால்கள் வேறு சுற்றி பறந்து கொண்டிருக்கும். முதல் முறை வந்த போது வங்கிக்குள் பணியாளர்கள் எல்லாம் பேய்களாக இருப்பார்களோ என்று நாங்கள் யோசித்தோம். இதில் என்ன விசேஷம் என்றால் பணியாளர்களில் மூவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். எல்லோரும் ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள் போன்றவர்களின் வாரிசுகள் போல. எப்போதும்&lt;span style="font-size:78%;"&gt; &lt;/span&gt;போல் அங்கே சென்று தலையைக் காண்பித்து விட்டு வடை சாப்பிட்டு விட்டு எல்லோரையும் போல சூரியன் அஸ்தமிக்கும் முன் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்து தான் அன்றும் நாங்கள் மூவர் சென்றோம். அங்கு போன பின்பு தான் தெரிந்தது டேட்டாவில் ஏதோ வில்லங்கம் என்று. என்ன பிரச்சினை என்று கண்டு பிடிக்கவே பல மணி நேரம் ஆகி விட்டது. நேரம் ஆக ஆக லேடீஸ் எல்லாம் டென்ஷன் ஆகி விட்டார்கள். பின்னாடி கும்பலாக நின்று கொண்டு மராட்டி, தமிழ், ஹிந்தி, கொங்கனி என்று எல்லா மொழிகளிலும் வசை பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த கூற்றுக்கு நடுவில் கவனம் செலுத்த தடுமாறிக்கொண்டிருந்த நேரம் பார்த்து மேனேஜர் ரூமிலிருந்து ஒரு பெரிய அலறல் சத்தம். மேனேஜர் அம்மா வேகமாக நடந்து கூடப் பார்த்திராத எங்களுக்கு அவர்கள் வெளியே ஓடி வந்த வேகம் பார்த்து என்ன நடந்தது என்று புரிய அதிக நேரம் தேவைப் படவில்லை. அவர்களுக்கு பின்னாடியே பலத்த ஒரு சீற்றத்துடன் ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. மறு கடைசிக்கு வந்து கதவுக்கும் க்ரில்லுக்கும் இடையில் புகுந்து கொண்டது. வெளியில் இருந்து தென்பட்டாலும் யாரும் அதை அடிக்கவோ, பிடிக்கவோ முயற்சிக்கவில்லை. என்னுடைய நல்ல நேரம் என்னுடைய பாம்பு புகழ் அறிந்தவர்கள் யாரும் அங்கு இல்லை. இது நடந்த ஐந்தே நிமிடத்தில் லேடீஸ் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். வாச்மேன் உள்ளிட்ட சிலர் அந்த பாம்பை வெளியே துரத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் நீயா நானா என்பது போல் சீறிக் கொண்டிருந்தது. ஒரு 30&lt;span style="font-size:0;"&gt; நிமிடப் &lt;/span&gt;போராட்டத்திற்கு பிறகு அதை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதற்கு பிறகு மீதம் இருந்தவர்கள் யாருக்கும் அங்கு இருக்க மனம் இல்லை. நாங்களும் டேட்டாவை காப்பி செய்து கொண்டு கிளம்பி ஆபீசுக்கு வந்து பொறுமையாக ராத்திரி வேலையை செய்து முடித்து அடுத்த நாள் காலை சென்று வங்கியில் போட்டோம். அப்போது தான் அங்கே வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் சம்பவம் அறிந்து, அது அந்த வட்டாரத்தில் வெகு நாட்களாக இருக்கும் ஒரு சாரைப் பாம்பு என்று கூறினார். இது வரை நான் அந்த மாதிரி சைசிலும் , நிறத்திலும் ஒரு சாரைப் பாம்பை பார்த்ததே இல்லை. எது எப்படியோ எங்களை ஆபபிலிருந்து காப்பாற்றிய பாம்புக்கு நன்றிகள் கோடிகூறி நீடூழி வாழ வணங்கி விட்டு வெளியேறினோம். வெகு நாட்களாக அங்கே சுற்றிக் கொண்டிருந்த போதிலும் அதை யாரும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சிலர் ஒரு தண்ணீர் பாம்பை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை பார்த்திருக்கிறேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-6787170244669722770?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/6787170244669722770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=6787170244669722770' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/6787170244669722770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/6787170244669722770'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2010/10/blog-post.html' title='ஆப்பிலிருந்து காப்பாற்றிய பாம்பு'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-8860748441297124310</id><published>2010-03-26T21:04:00.000-07:00</published><updated>2010-10-29T20:53:28.466-07:00</updated><title type='text'>உண்மையா இருககுமோ?</title><content type='html'>பல வருடங்களுக்கு முன் ரீடர்ஸ் டைஜெஸ்டில் ஒரு விஷயம் வந்திருந்தது. அதாவது எந்த மிருகம் மனிதர்களைப் போலவே குணம் படைத்தது என்று. நாய்கள் மனிதர்களை தங்கள் எஜமனர்களாய்ப் பார்க்குமாம். பூனைகள் தாங்கள் தான் மனிதர்களின் எஜமானர்கள் என்று நினைக்குமாம். பன்றிகள் தான் தங்களை மனிதர்களுக்கு சமம் என்று நினைக்குமாம். எப்படி தான் இதெல்லாம் கண்டு பிடிப்பாங்களோ தெரியாது, ஆனால் இதில் கொஞ்சம் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. நாய்கள் எப்போதும் தெரிந்த நபர்களைப் பார்த்தால் வாலை ஆட்டிக்கொண்டு, கால்களை மேலே போட்டு ஓவர் குஷியாகி விடும். அடித்து விரட்டினாலும் அடுத்த முறை மீண்டும் இதையே தான் செய்யும். அப்படியே கொஞ்சம் பயந்து கொண்டு இப்படி செய்யா விட்டாலும் மீண்டும் கூப்பிடும் போது பழையதை எல்லாம் மறந்து விட்டு அப்படியே தான் செய்யும். ஆனால் பூனைகள் அப்படி இல்லை. நாம் எவ்வளவு தான் கூப்பிட்டாலும் அவைகளுக்கு தோன்றும் போது தான் நம்மிடம் வரும். மற்ற நேரங்களில் "நீ எல்லாம் ஒரு மனுஷனா?" என்று கேட்பது போல பார்த்து விட்டு போய் விடும். சற்றும் எதிர்பாராத வேளையில் ஒரு சின்ன மியாவ் போட்டு நம் கால்களை உரசி சென்று  என்னமோ நம் மேல் ரொம்ப பாசம் இருப்பது போல் பாவ்லா பண்ணி விட்டு போகும். ( நிஜ) பன்றிகளிடம் அதிகம் ஒட்டி உறவடியதில்லை, அதனால் அவை எப்படி என்று தெரியாது. கடைசி சில நாட்களாக ஆபீசில் டேமஜெர்களிடம் சிக்கி நாய் படாத பாடு படும் போது ஏனோ பூனைகள் ஞாபகம் வந்து தொலைக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-8860748441297124310?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/8860748441297124310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=8860748441297124310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/8860748441297124310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/8860748441297124310'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2010/03/blog-post.html' title='உண்மையா இருககுமோ?'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-191512213368896958</id><published>2009-11-20T17:42:00.001-08:00</published><updated>2009-12-26T18:08:06.258-08:00</updated><title type='text'>மனிதக் குரங்கின் நண்பர்கள்</title><content type='html'>ரொம்ப நாட்களாக என் நண்பரிகளிடம் இருந்து ஒரு கம்ப்ளைன்ட். மற்ற மிருகங்களைப் பற்றி மட்டுமே எழுதறியே , எங்களைப் பத்தியும் ஏதாவது எழுது என்று டார்ச்சர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோருடைய சிறப்புகளைப் பற்றியும் எழுத முடியாது என்பதால் சிறப்பு பெயர்கள் பெற்றிருந்த சிலரைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். படித்துக் கொண்டிருக்கும் போது நம்முடன் பல்பு, ப்ளேடு போன்ற அக்றிணை பெயர்கள் யாருக்காவது வைக்கப் பட்டிருக்கும். கொக்கு என்று பெயர் சூட்டப் பெற்ற நபர்கள் நம்முடைய மத்தியில் பலர் உலாத்தி இருந்திருப்பார்கள். ஆனால் என்னை மிகவும் கவர்ந்த இருவர் பற்றி அவசியம் கூற வேண்டும். ஒருவன் பெருச்சாலி - பார்ப்பதற்கு ஒன்னும் அப்படி இருக்க மாட்டான்&lt;span style="font-size:0;"&gt;,&lt;/span&gt; சொல்லப் போனால் ஒல்லியாகத் தான் இருப்பான். அவனுடைய குணாதிசியம் விநோதமானது. தூங்கப் போகும் போது எல்லோரையும் போல மெத்தை மேல் தான் படுத்திருப்பான், ஆனால் இரவில் எப்போது என்ன ஆகுமோ தெரியாது காலையில் எழுந்து பார்த்தால் மெத்தைக்கு கீழே படுத்திருப்பான். ஒல்லியாக வேறு இருந்ததால் சில சமயங்களில் ஆள் இருக்கானா இல்லையா என்றே தெரியாது. காலை எழுந்த உடன் தலையை பயங்கரமாக சொறிய ஆரம்பித்து விடுவான். அந்த சத்தம் ஒரு வேளை பெருச்சாலி மண்ணைப் பறிப்பது போல இருந்ததோ என்னவோ அவனுக்கு அந்தப் பெயரே சூட்டப் பெற்றிருந்தது. வகுப்புகளுக்கு செல்ல நேரம் ஆகி விட்டால் இவனை எழுப்புவதற்காக எங்கள் நண்பன் ஒருவன் ஒரு விசேஷ முறை வைத்திருந்தான். கிட்டே சென்று மெத்தையை எட்டி உதைப்பான். " அடிங்க" என்று அடியில் இருந்து குரல் வந்தால் ஆள் இருக்கிறான் என்று தெரிந்து கொள்வோம். அப்போது மூஞ்சுறு போல இருந்தவன் சமீபமாக பார்த்த போது உண்மையிலயே பெருச்சாலி மாதிரி தான் பெருத்திருந்தான். அடுத்தது காண்டா என்று வெறுப்புடன் அழைக்கப் பெற்ற காண்டா மிருகம். இவனும் எங்கள் அறைத் தோழன் தான். இவன் சற்று குண்டாக இருப்பான். நடக்கும் போது எதிரில் யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டான். அனிமல் பிளானெட்டில் காண்டா மிருகத்திடம் பிலிம் காட்டிக் கொண்டிருக்கும் நபரை அது எப்படி தாக்க முயலும் என்பதை கண்டிருப்பீர்கள். தலையை கீழே குனிந்து கொண்டு வேகமாக ஓடி வரும் காண்டா மிருகத்தைப் போல தான் இவனும் நடப்பான். என்றாவது ஒரு நாள் அதிசயமாக சீக்கிரம் எழுந்து விட்டால் ரூமுக்குள் இங்கும் அங்கும் நடந்து எங்கள் தூக்கத்தை கெடுத்து வசை வார்த்தைகளை வாங்கிக் காட்டிக் கொள்வான். இவனுக்கு இப்போது ஒரு சின்ன காண்டா இருப்பதாக தகவல்.&lt;br /&gt;உலகிலயே மிகக் கொடிய விலங்குகள் பற்றிய வீடியோ ஒன்று சமீபமாக வெளியாகியது. உலகிலேயே மனிதனை விட கொடிய விலங்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் இந்த செயல். என்னத்தை சொல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.html"&gt;http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி ஈரோடு கதிர்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-191512213368896958?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/191512213368896958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=191512213368896958' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/191512213368896958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/191512213368896958'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/11/blog-post.html' title='மனிதக் குரங்கின் நண்பர்கள்'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-8637433908283419890</id><published>2009-07-10T22:53:00.000-07:00</published><updated>2009-07-10T22:57:08.333-07:00</updated><title type='text'>பாம்பு பிடித்த அனுபவம் - 2</title><content type='html'>பூனாவில் எங்களுடைய அலுவலகம் முதலில் ஒரு மலை அடிவாரத்தில் இருந்தது. பின்னர் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்துக்கு மாற்றி வந்தோம். அங்கு சென்றும் என்னுடைய பாம்பு புகழ் தொடர்ந்து வந்தது. ஒரு நாள் மாலை நேரம் தம் அடிக்க சென்ற நண்பர்கள் (?) பார்க்கிங்கில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருப்பதாக வந்து பிரேக்கிங் நியூஸ் கொடுத்தார்கள். இதைக் கேட்டதும் எனக்கு வில்லங்கம் வரப்போகிறது என்று புரிந்து விட்டது. உடனே அது வரை கம்ப்யூட்டரில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நான், படு பிஸியாக இருப்பது போல் பாவ்லா பண்ண ஆரம்பித்தேன். ஆனாலும் இந்த துரோகிககள் படை சூழ கீழே செல்ல வேண்டியதாயிற்று. போகும் பொது, இது பச்சை பாம்பு போல் எனக்கு தெரிந்த, விஷமற்ற பாம்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அதுவோ எனக்கு தெரியாத ஒரு இனமாக கறுப்பு / பிரவுன் நிறத்தில் இருந்தது. என்ன பாம்பு என்று பீலா விடலாம் என்று யோசித்து கொண்டிருந்தத போது அந்த பாம்பை என்ன செய்யலாம் என்று வேறு ஒரு விவாதம் கிளம்பியது. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அதை அடித்து விடலாம் என்று சொன்னார்கள், ஆனால் என்னுடைய துரோகிகள் படையோ என்னைக் காட்டி - இவன் வெறும் கையிலயே பாம்பை பிடிப்பான் என்று கூறி பில்ட் அப் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கேட்ட கூட்டம் படு குஷியாகி விட்டது. அதைப் பிடித்து காத்ரஜ் பாம்புப் பூங்காவிற்கு தகவல் கொடுக்கலாம் என்று ஒட்டு மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பாம்பைக் கையில் பிடித்து அப்பறம் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவா? இப்போது இருட்டாகி விட்டது அதனால் கையில் பிடிப்பது நல்லதில்லை என்று ஒரு வழியாக மக்களை நம்ப வைத்தேன். அதை ஒரு பக்கெட்டினுள் செல்ல வைத்து அடைத்து வைப்பதென்று முடிவு மாற்றப் பட்டது. இதைக் கேட்ட கூட்டம் ஒட்டு மொத்தமாக கலைந்தது - என்னுடைய அலுவலக எதிரிகள் தவிர. அந்த பாம்பை பக்கெட்டினுள் செல்ல வைப்பதற்குள் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அமைதியாக இருந்த அது, நாங்கள் சுற்றி பக்கெட்டும் குச்சியுமாக நிற்பதை பார்த்து கடும் சினத்திற்கு உண்டானது. இவ்வளவு பெரிய சத்தத்துடன் இப்படி ஒரு பாம்பு சீர முடியும் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்புக்கே போர் அடித்து விட்டதோ என்னமோ, ஒரு பக்கெட்டினுள் சென்று விட்டது. அப்பாடா என்று, எடுத்து சென்று ஒரு பாத் ரூமில் வைத்தோம். பாம்பு பூங்காவிற்கு போன் செய்த போது, 2 நாட்களுக்கு பிறகு தான் வர முடியும் என்று கூறி விட்டார்கள். அது வரை எங்களுக்கு ஒரே பயம், எப்படியாவது தப்பித்து வெளியே வந்து விட்டால் என்ன செய்வதென்று. 2 நாட்கள் பிறகு ஒரு வெள்ளைக்காரர் உட்பட 3 பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பாம்பைப் பார்த்தும் டக்கென்று கையை விட்டு எடுத்து விட்டார். அவர் கூறியது - இது Trinket Snake என்று. அடாடா, மீண்டும் ஒரு அழகு பாம்பா என்று நினைத்தேன். தெரிந்திருந்தால் நானே கையில் பிடித்திருப்பேனே? முன்னர் பிடித்தது ஒரு பாம்பு குஞ்சு போலும், அதனால் அதன் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. அவரிடம் இருந்து பாம்பை வாங்கி கொஞ்சம் டேமேஜ் கன்ட்ரோல் செய்து கொண்டேன். அப்படியும் எங்கள் அலுவகத்தில் என்னைத் தவிர வேறு யாரும் அந்த பாம்பை கையில் எடுக்க முன் வரவில்லை என்பதை நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன் - வேறு என்ன செய்ய முடியும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-8637433908283419890?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/8637433908283419890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=8637433908283419890' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/8637433908283419890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/8637433908283419890'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/07/2.html' title='பாம்பு பிடித்த அனுபவம் - 2'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-1825722640648539768</id><published>2009-06-12T18:11:00.001-07:00</published><updated>2009-06-26T21:47:08.289-07:00</updated><title type='text'>காக்கா கதைகள் - 1</title><content type='html'>நம்மை சுற்றி எப்போதும் இருப்பதாலோ என்னவோ காக்கைகளைப் பற்றி நாம் எப்போதும் அதிகம் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியானது என்று கருதப்படுவது நம் காக்கையார் தான். சென்னையில் இருந்த போது என் அம்மா தினமும் மதிய உணவிற்கு பிறகு ஒரு காக்காவிற்கு ஏதாவது சாப்பிட வைப்பார்கள். தவறாமல் தினமும் அதே நேரத்திற்கு வந்து முதலில் அமைதியாக இருக்கும். ஏதாவது வேலையாக இருந்து ஆகாரம் வைக்க சில நிமிடங்கள் தாமதம் ஆனால் ஒரெ ஒரு முறை "கா" என்று கத்தும். அப்படியும் தாமதம் ஆனால் தன் மூக்கினால் ஜன்னல் கண்ணாடியை கொத்தும். வேறு ஏதாவது ரூமில் இருந்தால் மற்ற ஜன்னல்களில் சென்று இதையே செய்யும். ஒரு நாளும் சாதம் உண்ணாது, சப்பாத்தி, பூரி, தோசை இது மாதிரி ஏதாவது டிபன் ஐட்டம் மட்டும் தான் சாப்பிடும். பூனாவில் இருந்த போது தினமும் இதே மாதிரி பால்கனி சுவற்றின் மேல் மீதமாகும் ஏதாவது உணவுகளை காக்கைகளுக்காக வைப்போம். நேரம் தவறாமல் தினமும் அதே நேரத்தில் பல காக்கைகள் வரும்.நாங்களும் பந்தியில் பரிமாறுவது போல் தீரத் தீர கொஞ்சம் உணவு வைப்போம். ஒரு நாள், வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள்- நானும் முந்தைய நாள் இரவு எதுவும் சமைக்கவில்லை. நேரத்திற்கு வரும் காக்கைகள் ஏமாந்து போய்விடுமே என்று எதாவது இருக்கிறதா என்று தேடினேன். பிரிட்ஜில் இருந்த பால் கோவா (பேடா) தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு 10 துண்டுகளை வெளியில் வைத்து விட்டு ஆபீஸ் சென்று விட்டேன். சாயந்திரம் பால்கனியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது பார்த்தால் சுவற்றின் மேல் ஏதோ ஒரு காட்டுப்பூ இருந்தது. அது எப்படி அங்கு வந்ததோ தெரியவில்லை. எனக்கு என்னமோ ஒரு காக்கா தான் ஸ்வீட்டுக்கு நன்றி சொல்லி வைத்ததோ என்று ஒரு கற்பனை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. நாம் செய்யுளில் படித்தது போல் உணவு உண்ணும் போது அவை மற்ற  காக்கைகளை கரைந்து அழைப்பதெல்லாம் இல்லை. ஒரு வேலை சங்க காலத்தில் அவை அப்படி இருந்திருக்கலாம். மனிதர்கள் போலவே காலப் போக்கில் அவைகளும் சுய நலமும், பொறாமையும் கொண்டவைகளாக மாறி விட்டன போலும். நம் இனத்தவர் என்ன ஆனால் என்ன, எனக்கு குவாட்டரும், பிரியாணியும் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் இந்த காலத்தில் காக்கைகள் மட்டும் இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-1825722640648539768?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/1825722640648539768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=1825722640648539768' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/1825722640648539768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/1825722640648539768'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/06/1.html' title='காக்கா கதைகள் - 1'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-7247903208225878132</id><published>2009-05-13T18:30:00.001-07:00</published><updated>2009-05-21T17:27:50.383-07:00</updated><title type='text'>நாய் புத்தி ?</title><content type='html'>நாய் புத்தி என்று அடிக்கடி மற்றவர்களை திட்டுவோம். எதற்காக இந்த மாதிரி திட்டுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நான் அறிந்த சில நாய்களின் குணாதிசியங்களை சொல்லுகிறேன். சிறுவனாக இருந்த போது என் பெரியம்மா டாமி என்று ஒரு பொமரேனியன் நாய் வைத்திருந்தார்கள். அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் என்னை மனுஷனாகக் கூட மதிக்காது. அதை வாக்கிங் கூட்டிப் போவதற்காக இருந்த செயினை யாரவது தொடும் சத்தம் கேட்டால் எங்கிருந்தாலும் அப்படி ஒரு கூச்சல் போட்டுக் கொண்டு வரும். மனிதர்களைப் போலவே பொசெசிவ் குணம் கொண்டது. ஆனால் நாங்கள் ஊருக்கு கிளம்பும் போது மிகவும் சோகமாக ஆகிவிடும். பஸ் ஸ்டாப் செல்லும் போது அது திரும்பி வீட்டுக்கு செல்லும் படி இழுக்கும். பின்னர் அதற்கு வயதான பின்பு கேடராக்ட் வந்து சுத்தமாக கண் தெரியாமல் போய் விட்டது. அப்போதெல்லாம் மனிதர்களுக்கே கேடராக்ட் ஆபரேஷன் என்பது மிகக் கடினமான ஒரு அறுவை சிகிச்சையாக இருந்தது. அதனால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போது அது மிகவும் அமைதியாக இருக்கும். அதனிடம் பேசினால் வாலை மட்டும் மெதுவாக ஆட்டிக்கொண்டிருக்கும், சத்தம் எதுவும் போடாது - பழுத்து பக்குவம் அடைந்த ஒரு ஞாநி போல இருக்கும். அடுத்து சென்னையில் எங்கள் வீட்டின் அருகே இருந்த ஒரு நாய் - பெயர் மீனா . எனக்குத் தெரிந்து தமிழ் பெயர் சூட்டப்பட்டிருந்த முதல் நாய் அது தான். இப்போதெல்லாம் நம் கிராமங்களில் கூட குழந்தைகளுக்கே தமிழ் பெயர் யாரும் வைப்பதில்லை. பரம சாதுவான மீனாவும் எங்கள் அனைவரின் செல்லப் பிராணியாக திகழ்ந்தது. என் அம்மா வீட்டின் அருகே இருக்கும் ஒரு சின்ன கோவிலுக்கு தினமும் போவது வழக்கம். தவறாமல் மீனாவும்  என் அம்மாவுடன் செல்லும். சாமி கும்பிடும் போது அமைதியாக இருந்து, பரிகாரத்தை சுற்றும் போது அதுவும் சுத்தும். ( பக்திமான் போல பக்திநாய்? ) கடைசியாக என் மாமா வீட்டு கருப்பு நாய் - பெயர் கரியான். அந்த ஏரியாவின் தாதா, முடிசூடா மன்னன் எல்லாம் அவன் தான். வட்டாரத்து நாய்களை எல்லாம் கூட்டு சேர்த்திக்கொண்டு அவர்கள் பின் தொடர ஏரியாவை வளம் வருவான். வீட்டுக் காம்பவுண்டுக்குள் எதாவது பாம்பு வந்துவிட்டால் அதை மோப்பம் பிடித்து கொன்று விடுவான். விரியன் பாம்பு கடித்து பரலோகத்தின் நுழைவாயில் வரை சென்று திரும்பியும் சற்றும் வீரம் குறையாத அஞ்சா நெஞ்சன். ஆனால் எங்கள் வீட்டு கேட்டை தாண்டி வர மாட்டான். அந்த ஏரியாவுக்கு என் பெற்றோர்கள் குடி வந்த புதிதில் கேட்டைத் தாண்டி உள்ளே வந்து போர்டிகோவில் இருக்கும் ஒரு தூணின் மேல் மூச்சா போவது வழக்கமாக கொண்டிருந்தானாம். இதனை வன்மையாக கண்டித்த என் அம்மாவின் வசை வார்த்தைகளை கண்டு பயந்தோ அல்லது ரோஷம் வந்தோ எங்கள் வீட்டு கேட்டை தாண்டி இப்போதும் வருவதில்லை. கடை வீதியில் தாதா போல உலா வரும் நபர் பூ விற்கும் பாட்டியிடமோ அல்லது பெட்டி கடை வைத்திருக்கும் பெண்மணியிடமோ திட்டு வாங்குவதில்லையா அந்த மாதிரி தான். நம்மில் பலர் எத்தனை பேர் இது மாதிரி இருக்கிறோம்? இப்படிப் பட்ட நாய்களை எல்லாம் பார்க்கும் போது ஒரு வேளை நாய்கள் எல்லாம் தங்களுக்குள் "உனக்கு ஏன் இந்த மனுஷ புத்தி ?" என்று கேட்டுக்கொள்ளுமோ என்று தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-7247903208225878132?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/7247903208225878132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=7247903208225878132' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7247903208225878132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7247903208225878132'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/05/blog-post_13.html' title='நாய் புத்தி ?'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-2618856606146859660</id><published>2009-05-12T18:31:00.000-07:00</published><updated>2009-05-12T20:43:15.690-07:00</updated><title type='text'>மீன் பிடித்த அனுபவங்கள்</title><content type='html'>&lt;p&gt;சின்ன வயதில் இருந்தே மீன்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் ஏன் என்றால் மீன்கள் மட்டும் தான் என் அப்பா வைத்துக் கொள்ள அனுமதிப்பார். பள்ளியிலிருந்து திரும்பும் போது தெருவில் ஏதாவது நாய் அல்லது பூனைக் குட்டிகள் இருந்தால் வீட்டிற்கு எடுத்து வந்து விடுவேன். என் அப்பா ஆபீஸில் இருந்து வந்த உடன் அவைகள் வெளியேற்றப்படும். எவ்வளவு தான் கெஞ்சிக் கூத்தாடினாலும் பப்பு வேகாது. அதனால் மீன்கள் மட்டும் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படிருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் குடி இருந்த வீட்டின் அருகில் இருந்த ஒரு வெற்றிடத்தில் மழை நீர் தேங்கி குளம் போல இருக்கும். அங்கே பல விதமான மீன்கள் இருக்கும் - கெண்டை, கெளுத்தி, ஜிலேபி என்று பல வகைகள். சிறுவனாக இருந்த போது அங்கே மீன் பிடித்துக்கொண்டிருக்கும் பெரிய பையன்களிடம் கெஞ்சி எதாவது ஒரு மீன் வாங்கி வந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் விட்டு வைப்பேன். பின்னர் சற்று பெரியவன் ஆன பின்பு நானே தண்ணீருக்குள் இறங்கி (ரொம்ப ஆழம் எல்லாம் இல்லை, சும்மா கணுக்கால் வரைக்கும் இருக்கும் இடத்தில் தான்) மீன்கள் ஒன்றிரண்டு பிடித்து வருவேன். ஒரு முறை பள்ளியில் இருந்து வரும் போது மீன் என்று நினைத்து தவளைக் குஞ்சுகளை வாட்டர் பாட்டிலில் பிடித்து வந்து அம்மாவிடம் உண்டை வாங்கினேன். இன்னும் சற்று பெரியவன் ஆன பின்பு ஒரு சில சக குரங்குகளுடன் மயில் வாகனத்தில் ஏறி (சைக்கிள் தான்) இப்போது பாஷ் ஏரியவாகக் கருதப்படும் கொட்டிவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களுக்கு சென்று குட்டைகளில் இருந்து மீன்கள் பிடித்து வருவோம். கொட்டிவாக்கத்தில் இருந்த ஒரு குட்டையில் குராமி மீன்கள் நிறைய இருந்தது மிகப் பெரிய ஆச்சரியம். (Dwarf மற்றும் Blue குராமி). அங்கே ஒரு சில இடங்களில் கடல் நீர் உள்ளே வந்து Scat மீன்கள் வேறு இருக்கும். இதை எல்லாம் இப்போது நினைத்து பார்க்கையில் ஏதோ கனவு போல தோன்றுகிறது. நான் பள்ளி முடிக்கும் போதே வீட்டின் அருகே இருந்த குளம் மூடப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்து விட்டன. இப்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-2618856606146859660?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/2618856606146859660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=2618856606146859660' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/2618856606146859660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/2618856606146859660'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/05/blog-post.html' title='மீன் பிடித்த அனுபவங்கள்'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-7712472774448699589</id><published>2009-04-29T21:15:00.001-07:00</published><updated>2009-05-01T20:24:46.776-07:00</updated><title type='text'>இன்சி வின்சி ஸ்பைடர்</title><content type='html'>பெங்களுருவில் நாங்கள் இருந்த வீட்டின் வெராண்டாவில் சட்டிகளில் சில செடிகள் வைத்திருந்தோம். ஒரு சட்டியில் இருந்த மணி பிளான்ட் கொடிகளை மேலே படர விட்டிருந்தோம். அதில் ஒரு சிலந்தி வலை வைத்திருந்தது. இரவு நேரங்களில் அந்த அழகான வலையின் நட்ட நடுவில் அந்த சிலந்தி அமர்ந்திருக்கும். அவ்வப்போது மிக அருகே நின்று அதை கவனித்துக் கொண்டிருப்பேன். அந்த சிலந்தி வலை மீது எதாவது பூச்சியோ, இலையோ விழுந்தால் உடனே வேகமாக அந்த இடத்தை நோக்கி செல்லும். சரி, ஒரு கொசுவை அடித்துப் போட்டு பார்த்தால் என்ன என்று தோன்றியது. கொசு அடிப்பது என்னமோ சுலபமான வேலை தான், ஆனால் அதை ஒரு சிலந்திக்காக அடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? சிலந்திகள் பூச்சிகளை உண்ணுவதில்லை, அவற்றின் ரத்தம் மற்றும் body fluid மட்டுமே உரிந்துகொள்ளும். இதனால் கொசுவை அடிக்கும் போது நசுங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உயிர் இருக்கும் படி பார்த்து அடித்தால் தேவலை. பல முறை சரியாக அடிக்காததால் கொசு தப்பித்தது உண்டு. ஒரு வழியாக சரியான பக்குவத்தில் கொசுவை அடிக்க கற்றுக்கொண்டேன். கொசுவை சிலந்தி வலையின் மீது போடுவதும் ஒரு கடினமான வேலை தான். இரண்டு விரல்களினால் லாவகமாகப் பிடித்துக்கொண்டு சிலந்தி வலையில் இருந்து ஒரு சில செண்டி மீட்டர் தூரத்தில் இருந்து வீச வேண்டும். தூரம் அதிகமாக இருந்தால் கொசு காற்றினால் அடித்து செல்லப்படும். சில சமயங்களில் வலையின் இடுக்குகளில் வழியாக கொசு வெளியேறி விடவும் வாய்ப்பு உண்டு. ஒரு வழியாக இதை எல்லாம் ஆராய்ந்து கற்றுக் கொண்டேன். நான் வீசிய கொசுவை முதல் முறையாக அந்த சிலந்தி வந்து உண்ட போது நான் பெருமிதம் அடைந்தேன். இது ஒரு சில நாட்கள் நடந்தது. ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பகலில் அந்த வலையின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் ! இலைகிளின் இடையே மறைந்து தூங்கிக்கொண்டிருந்த சிலந்தி வேகமாக அதன் வலைக்கு வந்தது. என்னுடைய குரல் கேட்டு தான் வந்தது என்றெல்லாம் நான் பீலா விட மாட்டேன். தன் வலையின் அருகே வந்து நின்றிருந்த எங்களை உணர்ந்து கொசு கிடைக்கும் என்று நினைத்து  வந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சில நாட்கள் காணமல் சென்றுவிட்டு மீண்டும் வந்து அதே இடத்தில் வலை வைப்பதும் ஒரு சில வாரங்கள் நடந்தது. பிறகு அதே இடத்தில் பல சிலந்திகள் குடியேறின. வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் தங்களுக்கு என்னமோ பேய் பங்களாவில் நுழைவது போல் இருப்பதாக கூறுவார்கள் ஆனாலும் நான் பிடிவாதமாக அந்த வலைகளை கலைக்கக் கூடாது என்று கூறி இருந்தேன். வேலை நிமித்தமாக வேறு இடம் செல்ல வேண்டி ஆனதால் அந்த வீட்டை மாற்ற வேண்டியது ஆயிற்று. பின்னர் எப்போதாவது இதே போல் சிலந்திகளுடன் நட்பு பாராட்ட கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் வீட்டில் எங்காவது சிலந்தி வலை இருந்தால் கொசு அடித்துப் போட்டு பாருங்கள். நான் தான் விலாவாரியாக எப்படி கொசு அடித்துப் போடுவது என்று மேலே கூறி இருக்கிறேனே? கொசுறு - அந்த சிலந்திக்கு நானும் என் மகளும் வைத்த பெயர் "இன்சி வின்சி". பல முறை நிலாச்சோறு மாதிரி சிலந்தி சோறு சாப்பிட்டிருக்கிறாள் அவள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-7712472774448699589?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/7712472774448699589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=7712472774448699589' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7712472774448699589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7712472774448699589'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/04/blog-post_29.html' title='இன்சி வின்சி ஸ்பைடர்'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-2626634020983523813</id><published>2009-04-11T08:59:00.001-07:00</published><updated>2009-04-11T11:26:25.094-07:00</updated><title type='text'>பாம்பு பிடித்த அனுபவம் - 1</title><content type='html'>பூனாவில் எங்கள் அலுவலகம் மலை அடிவாரத்தில் இருந்ததையும் அங்கே சில பல ஜந்துக்கள் வந்து சென்று கொண்டிருந்ததையும் பற்றி எழுதி இருந்தேன். பாம்புகள் அங்கே அடிக்கடி இரவுகளில் தென்படும் ஆனால் ஒரு முறை பகலில் தண்ணீர் தொட்டி அருகே ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. நமக்கு தான் எல்லாத்துலையும் அறை குறை ஞானம் ஆச்சே. மெட்ராஸ் பாம்பு பூங்காவில் ராமுலஸ் விட்டேகர் எழுதிய "Common Indian Snakes" மற்றும் "A Field Guide of Indian Snakes" ஆகிய புத்தகங்களை வாங்கிப் படித்து பாம்புக்கும் மரவட்டைக்கும் வித்தியாசம் காணும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தேன். பாம்புகள் தென்படும் போதெல்லாம் அது எந்த பாம்பு என்று சக ஊழியர்களிடம் பீலா விட்டுக்கொண்டிருப்பேன். இதில் பெரிய காமெடி என்னவென்றால் எனக்கு "கலர் பிலைண்ட்நெஸ்" உண்டு. அதனால் சில பல கலர்களில் குழப்பம். ( பலர் கலர் பிலைண்ட்நெஸ் என்றால் கருப்பு வெள்ளை தவிர மற்ற நிறங்கள் தெரியாதா என்று கேட்டதுண்டு). பகலில் இந்த பாம்பைப் பார்த்ததும் படு குஷி ஆகி விட்டேன். அதைக் கையில் பிடித்தால் என்ன என்று தோன்றியது. பாம்பு வேறு கொஞ்சம் சிறியதாக இருந்தது கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. சின்ன நாகப் பாம்பு கொத்தினாலும் அம்பேல் தான் என்றெல்லாம் அப்போது தோணவில்லை. கூட இருந்த நண்பர்கள் (? அடப் பாவிகளா) வேறு உற்சாகப்படுத்தி (உசுப்பேத்தி) விட்டார்கள். சட்டென்று சென்று அதைப் பிடித்து விட்டேன். பாம்புக்கும் பிடி படுவது அது தான் முதல் முறை போலும். 2-3 முறை என்னை கொத்துவது போல் கை அருகே வந்தது. பிறகு என்ன நினைத்தோ பரிதாபப்பட்டு விட்டு விட்டது. அப்போது தான் உதித்தது ஞானோதயம் - இனியும் பாம்பு விளையாட்டு எல்லாம் வேண்டம் என்று. சற்று தொலைவில் இருந்த புதர் அருகே விட்டு விட முடிவு செய்தேன். வேகமாக ஓடினால் மானப் பிரச்சினை வேற. அதனால் முகத்தை தைரியமாக வைத்து கொண்டு பாம்பையும் உயிரையும் கையில் பிடித்து கொண்டு சென்று அந்த புதரில் விட்டு வந்தேன். அதன் பிறகு என்னை என்னமோ சின்ன வயதிலிருந்தே பாம்புகளோடு ஒட்டி உறவாடியவன் போல ஒரு இமேஜ் உண்டானது. எங்கள் அலுவலக சமையல் பெண்மணியும் அக்கம் பக்கத்திலெல்லாம் புகழை பரப்பி விட்டாள். பிறகு பொறுமையாக ஆராய்ச்சி செய்த பொது தான் தெரிந்து கொண்டேன் - அது "Trinket Snake" வகையை சேர்ந்தது, விஷமற்றது  என்று. தமிழில் "அழகு பாம்பு" என்று போட்டிருந்தது ஆனால் நான் கேள்வி பட்டதில்லை ( அவ்வளவு தெரிந்து வைத்திருந்தேன்). அதன் பிறகு பின்னொரு முறை அலுவலகத்தில் வேறு ஒரு பாம்பு பிடித்தோம். அது வேறொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-2626634020983523813?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/2626634020983523813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=2626634020983523813' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/2626634020983523813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/2626634020983523813'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/04/1.html' title='பாம்பு பிடித்த அனுபவம் - 1'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-7053335837889195794</id><published>2009-04-03T20:48:00.001-07:00</published><updated>2009-04-03T22:20:10.922-07:00</updated><title type='text'>எங்கள் காவல் நாய்</title><content type='html'>பூனாவில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் எங்கள் அலுவலகம் ஒரு சின்ன மலையின் அடிவாரத்தில் இருந்தது.   அருகில் வேறு வீடுகள் எல்லாம் அதிகம் இருக்காது. சுற்றி மரங்கள் எல்லாம் அதிகம் இல்லா விட்டாலும் செடிகள் புதர்கள் எல்லாம் நிறைய இருக்கும். நிறைய பறவைகள், பாம்புகள் (அவைகளை பற்றி விவரமாக பிறகு சொல்கிறேன்) எல்லாம் வரும். இவைகள் எல்லாம் இல்லாமல் தெரு நாய்கள் பல எங்கள் அலுவலகத்திற்கு அடிக்கடி வரும். மதிய உணவின் போது மிச்சம் ஆகும் சப்பாத்திகளை அவைகளுக்கு போட்டு நட்பு வளர்த்து வைத்திருந்தோம். அவைகளில் ஒரு நாய்கள் குடும்பம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தாய் நாய் தன் குட்டிகளை கூட்டிக்கொண்டு வரும். 5 குட்டிகள் இருந்ததாக ஞாபகம். நாங்கள் போடும் சப்பாத்திகளை தன் வாயால் எடுத்து ஒவ்வொரு குட்டிக்கும் சமமாக பங்களித்து கொடுக்கும். இது போல் வேறு எந்த நாயும் செய்து நான் பார்த்தது இல்லை. குட்டிகள் எல்லாம் துரு துருவென இருக்கும். அந்தக் கூட்டம் வருவதை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். மிகவும் ஆனந்தமாக விளையாடிக்கொண்டு மெதுவாக அவைகள் ஓடி வருவதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். மாலை 5:30 - 6:00 மணி அளவில் தினமும் வந்து கொண்டிருந்த அந்தக் கூட்டம் திடீர் என ஒரு நாள் வருவதை நிறுத்தி விட்டன. பிறகு சில நாட்கள் கழித்து குட்டிகள் மட்டும் வந்தன. மற்றவைகள்  என்ன ஆயின என்ற கவலை இருந்த போதிலும் இவைகள் வந்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது. திடீரென ஒரு நாள் , ஒரு குட்டி மட்டும் வந்து வெளியே போட்டிருந்த பெஞ்சின் அடியில் படுத்து மிகுந்த வேதனையுடன் முனகிக்கொண்டிருந்தது. பார்த்தால் அதன் இடது பின்னங்கால் மீது ஏதோ ஸ்கூட்டர் போன்ற வாகனம் ஏறியது போல பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அந்த குட்டி மிகவும் உடல் இளைத்து போயிருந்தது. எங்களுக்கு அந்த குட்டி உயிர் பிழைக்கும் என தோன்றவில்லை. அந்த மரண வேதனையிலும் அந்த குட்டி எங்களை தேடி வந்திருந்தது. அதன் முன்னால் ஒரு குண்டாவில் பால் ஊற்றி வைத்தோம். எத்தனை நாட்களாக பட்டினி கிடந்ததோ தெரியவில்லை, மிகவும் சிரமப்பட்டு எழுந்து வந்து அந்த பால் முழுவதையும் குடித்து முடித்தது . மாலையில் சில பிரெட் துண்டுகளை பாலில் நலைத்து கொடுத்தோம். அவற்றையும் சாப்பிட்டு விட்டு முனகிக்கொண்டே படுத்திருந்தது. காலை பார்க்கும் போது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு துளியும் இல்லை. ஆனால் அது நாளுக்கு நாள் உடல் நிலை முன்னேறி எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இடது பின்னங்கால் முழுவதும் செயல் இழந்து போனது. அடுத்த சில வாரங்களில் பழைய உற்சாகம் திரும்பியது. அது இப்போது எங்கள் அலுவலகத்தின் காவல் நாயாக மாறியது. யாராவது புதிய நபர்கள் வந்தால் அதற்கே உரிய மழலைக்  குரலுடன் குரைத்துக் கொண்டு மூன்று கால்களில் வேகமாக ஓடி செல்லும். அதைப் பார்த்து வந்தவர்கள் பயந்து விடுவார்கள் ஆனால் எங்களுக்கோ சிரிப்பாக இருக்கும்.  இவ்வாறாக 2-3 மாதங்கள் எங்களுடன் மிகப்பிரியமாக இருந்த குட்டி ஒரு நாள் திடீரென காணாமல் போனது. எங்கள் அலுவலகத்தை விட்டு 100 மீட்டர் கூட தாண்டி போகாத அது வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்த போதும் ஒரு நப்பாசையில் அக்கம் பக்கத்தில் எல்லாம் தேடினோம். எங்கள் அலுவகத்தில் சமையல் வேலை செய்து வந்த ஒருவள் தான் அதை எப்போதும் கத்திக்கொண்டே இருப்பாள். அவள் மீது தான் எங்களுக்கு சந்தேகம். அதை எங்கோ எடுத்து சென்று விட்டு விட்டாள் என்பது எங்கள் ஐயம். 8-9 வருடங்கள் கடந்திருந்தாலும் இப்போது எழுதும் போது கூட வருத்தமாக இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-7053335837889195794?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/7053335837889195794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=7053335837889195794' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7053335837889195794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7053335837889195794'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2009/04/blog-post.html' title='எங்கள் காவல் நாய்'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-1404616574874371316</id><published>2008-12-07T20:16:00.001-08:00</published><updated>2008-12-21T11:25:08.601-08:00</updated><title type='text'>கோரக்பூர் அனுபவங்கள் - பிரியமாக வந்த மாடுகள்</title><content type='html'>வேலை நிமித்தமாக சில முறை உத்தர் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகருக்கு சென்றதுண்டு. அந்த ஊரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், சின்ன வயதில் நாம் டிவியில் பார்த்த மால்குடி டேஸ் சீரியலில் பார்த்த மால்குடி மாதிரியே இருக்கும். ரொம்ப எளிமையான மக்கள், அதிகம் போக்குவரத்து எல்லாம் இருக்காது. சாப்பாடு எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கும், விலையும் கம்மி. ஊரையும் அந்த மக்களையும் பத்தி பேசனும்னா நிறைய பேசலாம். சில கஷ்டங்கள் இருந்தாலும் மிகவும் பிடித்திருந்தது. சரி, மேட்டருக்கு வருவோம். தினமும் ராத்திரி சாப்பிட்ட பிறகு அலுவலக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாக் போவது வழக்கம். ஹோட்டலுக்கு திரும்பி வரும் போது ஒரு தள்ளு வண்டியில் ஸ்வீட் விற்கும் பொடியனிடம் ரப்டி, பால் கோவா இந்த மாதிரி ஐட்டம் ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். அந்த இடத்தில் சில கடைகள் இருந்ததால் அங்கே மக்கள் சாப்பிட்டு போடும் வாழைப்பழ தோல் ஆகியவற்றை சாப்பிடுவதற்காக சில மாடுகள் எப்போதும் நிற்கும். அந்த ஊர் மக்கள் யாரும் விலங்குகளை ஒன்றும் செய்வதில்லை என்பதை நான் பல முறை பார்த்துள்ளேன். வயல்களில் வேலை செய்யும் போது ஆள் உயர கொக்குகள் எல்லாம் விவசாயிகளின் கூடவே நின்று மேய்ந்து கொண்டிருக்கும். சிட்டு குருவிகள், அணில்கள் எல்லாம் பயமின்றி நம் மிக அருகில் வந்து போய் வரும். நம்ம ஊர் மிலிட்டரி ஹோட்டல்களில் கூட இந்த ஐட்டம்கள் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை என்று நீங்கள் பார்த்திருக்கலாம். நம் ஊரில் லேகியம் ஆகாமல் மிச்சம் இருக்கும் குருவிகள், அணில்கள், கொக்குகள் எல்லாம் கொஞ்சம் உஷார் ஆகி விட்டன போலும். கோரக்பூரில் மாடுகளை எல்லாம் யாரும் தொந்தரவு செய்வதில்லை. ரோட்டில் படுத்திருந்தாலும் அவைகளை யாரும் அடித்து விரட்டுவதில்லை. அவைகளை கண்டு கொள்ளாமல் விட்டு வீடுவார்கள் அவ்வளவு தான். ஒரு முறை அங்கே ஏதோ ஸ்வீட் வெட்டிக்கொண்டு இருந்த போது அருகே நின்றிருந்த மாட்டின் தலையை தொட்டு தடவி கொடுத்தேன். அந்த மாட்டுடன் யாரும் அவ்வளவு அன்பு கட்டியதில்லை போலும். அது வந்து ஒரு சின்ன பூனைக்குட்டியைப் போல மேலே உரசிக்கொண்டு நின்றது. என்ன ஆச்சரியம் , இதை பார்த்த அங்கிருந்த ஒரு 4,5 மாடுகள் எல்லாம் வந்து அதே போல நின்றன. நானும் நண்பர்களும் ஆளுக்கொரு மாடாக தத்தெடுத்து , பசு நேசன்களாக மாறினோம். சுற்றி இருந்த மக்கள் எல்லாம் எங்களை விநோதமாக பார்த்தார்கள். அங்கே யாரும் விலங்குகளிடம் பெரிய அன்பு செலுத்துவதில்லை என்பது உண்மை தான். &lt;span class=""&gt;அன்பு செலுத்தாவிட்டாலும் &lt;/span&gt;பரவாயில்லை மிலிட்டரி ஹோட்டல்களில் அவைகளை ருசிப்பதை நிறுத்தினாலே போதும். சிட்டு குருவிகள், அணில்கள், மைனாக்கள் எல்லாம் இல்லாமல் ஒரு மாதிரியாக இருக்கிறது வீட்டில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-1404616574874371316?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/1404616574874371316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=1404616574874371316' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/1404616574874371316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/1404616574874371316'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2008/12/blog-post.html' title='கோரக்பூர் அனுபவங்கள் - பிரியமாக வந்த மாடுகள்'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-7603517113187551257</id><published>2008-08-27T17:18:00.000-07:00</published><updated>2008-08-27T17:49:00.735-07:00</updated><title type='text'>செடிகளுக்கு உணர்வுகள் உண்டா?</title><content type='html'>முட்டையிலிருந்து கோழி வந்ததா மாதிரி இதுவும் ஒரு விவாதிக்கத்தக்க மேட்டர் தான். மரங்களுக்கும் செடிகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பது என்னுடைய அனுபவப்பூர்வ கருத்து. &lt;span class=""&gt;இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன் நான் வேலை பார்த்து கொண்டிருந்த இடத்தில் ஜன்னல்களில் நிறைய செடிகள் வைத்திருந்தோம். ஒவ்வொருவர் சீட் முன்னால் இருக்கும் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது அவரவர் கடமை என்பது ஏழுதப்படாத விதி. எழுதப்பட்ட விதிகளையே நாம் மறந்து விடுகிறோம் என்கிற நிலையில் எழுதப்படாத இந்த விதியை நான் சில சமையங்களில் மறந்து விடுவேன். என் சீட் முன்னால் இருந்த செடி எந்த வகை என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இலைகள் எல்லாம் ஒரு வித சிவப்பு நிறத்தில் இருக்கும். சுமார் 2 அடி உயரத்தில் இருந்தது அந்த செடி. 2-3 நாட்கள் தண்ணீர் ஊற்ற சில சமையங்களில் மறந்து விடுவேன். அப்போதெல்லாம் அந்த செடி தன் இலைகள் எல்லாவற்றையும் ஜன்னல் உள் பக்கமாக சுருக்கிக்கொண்டு என்னை நோக்கி செய்கை செய்வது போல ஒரு உணர்வு வரும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த செடி மொத்தமாக ஜன்னல் கம்பியின் வெளிப்புறமாக தான் பொதுவாக இருக்கும். தண்ணீர் ஊற்றிய சில நிமிடங்களிலேயே அது தன்னுடைய இயல்பான நிலைக்கு சென்று விடும். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.செடிகளை lie detector உடன் கனெக்ட் செய்து "நான் உன்னை வெட்டப்போகிறேன்" என்பது போல் ஏதாவது சொன்னால் அதில் ஒரு sudden spike வரும் என்று ஆய்வுகள் கூறுவதாக படித்திருக்கிறேன். எங்கள் வீட்டில் கூட நான் வைத்திருந்த செடிகள் எல்லாம் என் அன்பை உணர்ந்து வளர்வது போல் எனக்கு ஒரு நம்பிக்கை. செடிகளுடன் பேசினாலோ அல்லது இனிமையான இசை கேட்கும் படி செய்தாலோ செடிகள் நன்றாக வளர்கின்றன என்று கூட படித்திருக்கிறேன். உங்கள் கருத்து என்னவோ?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-7603517113187551257?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/7603517113187551257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=7603517113187551257' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7603517113187551257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/7603517113187551257'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2008/08/blog-post.html' title='செடிகளுக்கு உணர்வுகள் உண்டா?'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-322093175114465953</id><published>2008-05-11T18:11:00.000-07:00</published><updated>2008-08-21T19:55:36.400-07:00</updated><title type='text'>எல்லாம் நேரமடா சாமி</title><content type='html'>என்னுடைய நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார். பல நாட்கள் என்னுடன் அலுவலகத்துக்கு சேர்ந்து செல்லும் பாக்கியம் பெற்றவர். ஆபீஸ் பஸ்சில் போகும் போது என்னுடைய பிளேடு மேட்டர் எல்லாத்தையும் தாங்கிக் கொள்ளும் நல்ல குணம் கொண்டவர். போகும் போது வானில் தென்படும் பறவைகள், தெருவில் தென்படும் நாய், மாடு, கழுதை போன்றவற்றை காட்டி ஏதாவது சொல்லுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொள்ளுவார். ஆனால் இயற்கை , இயற்கையின்  அழகு போன்ற விஷயங்களில் அதிகம் ஆர்வம் இல்லாதவர். ஒரு முறை மேலே பறந்து கொண்டிருந்த பெலிகன் பறவையை அவரிடம் காட்டினேன்.  உற்று பார்த்துவிட்டு என்னை திரும்பி பார்த்து " காக்கா தானே?" அப்படினு கேட்டு ஒரு போடு போட்டார். சில மாதங்களுக்கு அப்பறம் எல்லா அப்பாவிகளைப் போல அவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. ஒரு நாள் எப்போதும் போல பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது திடீர் என்று ஒரு மரத்தைக் காட்டி "சூப்பரா இருக்குல்ல ?" அப்படின்னு சொன்னார். எதுவும் புரியாமல் அவரை பார்த்த போது "அந்த மரத்தோட பூவெல்லாம் பாருங்க, எவ்வளவு அழகா இருக்குன்னு..." அப்படினு சொன்னார். பெலிகனை பார்த்து காக்காவான்னு கேட்ட ஆள் இப்போ நானே கவனிக்காத ஒரு மரத்தோட பூவை எல்லாம் ரசிக்க ஆரம்பிச்சுட்டாரே அப்படினு யோசிச்சேன். எல்லாம் நேரமடா சாமி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-322093175114465953?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/322093175114465953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=322093175114465953' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/322093175114465953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/322093175114465953'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2008/05/blog-post_11.html' title='எல்லாம் நேரமடா சாமி'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-952181897718682439.post-8984341456612146071</id><published>2008-05-01T17:24:00.000-07:00</published><updated>2008-08-21T19:58:13.229-07:00</updated><title type='text'>என்னுடைய முதல் பதிவு</title><content type='html'>எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை - எவன் எவனோ ப்ளாக் வெச்சிருக்கானே நாமும் கண்டிப்பா ஒன்னு ஆரம்பிக்கணும் அப்படின்னு.  &lt;a href="http://imsaiarasi.blogspot.com"&gt;சில பேர் இம்சை பன்னறதுக்குனே ப்ளாக் எல்லாம் வெச்சிருக்காங்க :)&lt;/a&gt; ... சேரி ப்ளாக் எல்லாம் ஓசில ஆரம்பிச்சடலம் ஆனா எழுத மேட்டர் வேணுமே? எதை பத்தி எழுதலாம் அப்படின்னு இருந்த கொஞ்ச நஞ்ச மூளையையும் வெச்சு யோசிச்ச அப்போ தான் நம்ம குரங்கு புத்தி சூப்பரா வேலை செஞ்சு விலங்குகள் பத்தி எழுதலாம்னு ஒரு ஐடியா குடுத்துச்சு. விலங்குகள் பத்தி ஆராய்ச்சி பண்ணி எழுதற அளவுக்கு தான் நமக்கு ஒண்ணும் பெரிய ஞானம் கிடையாதே அதனால விலங்குகளுடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் விலங்குகள் சார்ந்த சில நிகழ்வுகளும் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். எல்லா விலங்குகளுக்கும் நம்மை போலவே உணர்வுகள் இருக்கு அப்படிங்கறது என்னோட கருத்து. அப்போ ஆடு, கோழி எல்லாம் வெட்டி சாப்பிடும் போது அதோட உணர்வுகள் பத்தி யோசிக்க மாட்டியா அப்படினு கேட்டு மடக்க கூடாது. :) அவைகளும் நம்மில் பலரைப்போல அன்புக்கும், அனுதாபத்துக்கும் ஏங்கி நிற்கின்றன. அவைகளுக்கும் நம்மைபோல போர் அடிக்கும் தருணங்களும் உண்டு. விலங்குகள் மட்டும் இல்லை. செடிகளுக்கும் உணர்வுகள் இருப்பதாக நான் நம்புகிறேன். சில ஆய்வுகள் இது குறித்து கூறுவதாக கேள்வி. ஏதோ சொல்லறேன் , கருத்துக்களை சொல்லுங்கள். நல்லா இருந்தா பப்ளிஷ் பண்ணறேன். நன்றி . வணக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/952181897718682439-8984341456612146071?l=manidhakurangu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidhakurangu.blogspot.com/feeds/8984341456612146071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=952181897718682439&amp;postID=8984341456612146071' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/8984341456612146071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/952181897718682439/posts/default/8984341456612146071'/><link rel='alternate' type='text/html' href='http://manidhakurangu.blogspot.com/2008/05/blog-post.html' title='என்னுடைய முதல் பதிவு'/><author><name>மனிதக்குரங்கு</name><uri>http://www.blogger.com/profile/13947852779506107501</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp1.blogger.com/_0PFVruuzhwQ/SBPboNxUnHI/AAAAAAAAAAQ/dKet_q8IZEQ/S220/gorilla.jpg'/></author><thr:total>1</thr:total></entry></feed>
