செடிகளுக்கு உணர்வுகள் உண்டா?

முட்டையிலிருந்து கோழி வந்ததா மாதிரி இதுவும் ஒரு விவாதிக்கத்தக்க மேட்டர் தான். மரங்களுக்கும் செடிகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பது என்னுடைய அனுபவப்பூர்வ கருத்து. இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன் நான் வேலை பார்த்து கொண்டிருந்த இடத்தில் ஜன்னல்களில் நிறைய செடிகள் வைத்திருந்தோம். ஒவ்வொருவர் சீட் முன்னால் இருக்கும் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது அவரவர் கடமை என்பது ஏழுதப்படாத விதி. எழுதப்பட்ட விதிகளையே நாம் மறந்து விடுகிறோம் என்கிற நிலையில் எழுதப்படாத இந்த விதியை நான் சில சமையங்களில் மறந்து விடுவேன். என் சீட் முன்னால் இருந்த செடி எந்த வகை என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இலைகள் எல்லாம் ஒரு வித சிவப்பு நிறத்தில் இருக்கும். சுமார் 2 அடி உயரத்தில் இருந்தது அந்த செடி. 2-3 நாட்கள் தண்ணீர் ஊற்ற சில சமையங்களில் மறந்து விடுவேன். அப்போதெல்லாம் அந்த செடி தன் இலைகள் எல்லாவற்றையும் ஜன்னல் உள் பக்கமாக சுருக்கிக்கொண்டு என்னை நோக்கி செய்கை செய்வது போல ஒரு உணர்வு வரும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த செடி மொத்தமாக ஜன்னல் கம்பியின் வெளிப்புறமாக தான் பொதுவாக இருக்கும். தண்ணீர் ஊற்றிய சில நிமிடங்களிலேயே அது தன்னுடைய இயல்பான நிலைக்கு சென்று விடும். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.செடிகளை lie detector உடன் கனெக்ட் செய்து "நான் உன்னை வெட்டப்போகிறேன்" என்பது போல் ஏதாவது சொன்னால் அதில் ஒரு sudden spike வரும் என்று ஆய்வுகள் கூறுவதாக படித்திருக்கிறேன். எங்கள் வீட்டில் கூட நான் வைத்திருந்த செடிகள் எல்லாம் என் அன்பை உணர்ந்து வளர்வது போல் எனக்கு ஒரு நம்பிக்கை. செடிகளுடன் பேசினாலோ அல்லது இனிமையான இசை கேட்கும் படி செய்தாலோ செடிகள் நன்றாக வளர்கின்றன என்று கூட படித்திருக்கிறேன். உங்கள் கருத்து என்னவோ?