எல்லாம் நேரமடா சாமி

என்னுடைய நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார். பல நாட்கள் என்னுடன் அலுவலகத்துக்கு சேர்ந்து செல்லும் பாக்கியம் பெற்றவர். ஆபீஸ் பஸ்சில் போகும் போது என்னுடைய பிளேடு மேட்டர் எல்லாத்தையும் தாங்கிக் கொள்ளும் நல்ல குணம் கொண்டவர். போகும் போது வானில் தென்படும் பறவைகள், தெருவில் தென்படும் நாய், மாடு, கழுதை போன்றவற்றை காட்டி ஏதாவது சொல்லுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொள்ளுவார். ஆனால் இயற்கை , இயற்கையின் அழகு போன்ற விஷயங்களில் அதிகம் ஆர்வம் இல்லாதவர். ஒரு முறை மேலே பறந்து கொண்டிருந்த பெலிகன் பறவையை அவரிடம் காட்டினேன். உற்று பார்த்துவிட்டு என்னை திரும்பி பார்த்து " காக்கா தானே?" அப்படினு கேட்டு ஒரு போடு போட்டார். சில மாதங்களுக்கு அப்பறம் எல்லா அப்பாவிகளைப் போல அவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. ஒரு நாள் எப்போதும் போல பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது திடீர் என்று ஒரு மரத்தைக் காட்டி "சூப்பரா இருக்குல்ல ?" அப்படின்னு சொன்னார். எதுவும் புரியாமல் அவரை பார்த்த போது "அந்த மரத்தோட பூவெல்லாம் பாருங்க, எவ்வளவு அழகா இருக்குன்னு..." அப்படினு சொன்னார். பெலிகனை பார்த்து காக்காவான்னு கேட்ட ஆள் இப்போ நானே கவனிக்காத ஒரு மரத்தோட பூவை எல்லாம் ரசிக்க ஆரம்பிச்சுட்டாரே அப்படினு யோசிச்சேன். எல்லாம் நேரமடா சாமி...

என்னுடைய முதல் பதிவு

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை - எவன் எவனோ ப்ளாக் வெச்சிருக்கானே நாமும் கண்டிப்பா ஒன்னு ஆரம்பிக்கணும் அப்படின்னு. சில பேர் இம்சை பன்னறதுக்குனே ப்ளாக் எல்லாம் வெச்சிருக்காங்க :) ... சேரி ப்ளாக் எல்லாம் ஓசில ஆரம்பிச்சடலம் ஆனா எழுத மேட்டர் வேணுமே? எதை பத்தி எழுதலாம் அப்படின்னு இருந்த கொஞ்ச நஞ்ச மூளையையும் வெச்சு யோசிச்ச அப்போ தான் நம்ம குரங்கு புத்தி சூப்பரா வேலை செஞ்சு விலங்குகள் பத்தி எழுதலாம்னு ஒரு ஐடியா குடுத்துச்சு. விலங்குகள் பத்தி ஆராய்ச்சி பண்ணி எழுதற அளவுக்கு தான் நமக்கு ஒண்ணும் பெரிய ஞானம் கிடையாதே அதனால விலங்குகளுடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் விலங்குகள் சார்ந்த சில நிகழ்வுகளும் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். எல்லா விலங்குகளுக்கும் நம்மை போலவே உணர்வுகள் இருக்கு அப்படிங்கறது என்னோட கருத்து. அப்போ ஆடு, கோழி எல்லாம் வெட்டி சாப்பிடும் போது அதோட உணர்வுகள் பத்தி யோசிக்க மாட்டியா அப்படினு கேட்டு மடக்க கூடாது. :) அவைகளும் நம்மில் பலரைப்போல அன்புக்கும், அனுதாபத்துக்கும் ஏங்கி நிற்கின்றன. அவைகளுக்கும் நம்மைபோல போர் அடிக்கும் தருணங்களும் உண்டு. விலங்குகள் மட்டும் இல்லை. செடிகளுக்கும் உணர்வுகள் இருப்பதாக நான் நம்புகிறேன். சில ஆய்வுகள் இது குறித்து கூறுவதாக கேள்வி. ஏதோ சொல்லறேன் , கருத்துக்களை சொல்லுங்கள். நல்லா இருந்தா பப்ளிஷ் பண்ணறேன். நன்றி . வணக்கம்.