என்னுடைய முதல் பதிவு

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை - எவன் எவனோ ப்ளாக் வெச்சிருக்கானே நாமும் கண்டிப்பா ஒன்னு ஆரம்பிக்கணும் அப்படின்னு. சில பேர் இம்சை பன்னறதுக்குனே ப்ளாக் எல்லாம் வெச்சிருக்காங்க :) ... சேரி ப்ளாக் எல்லாம் ஓசில ஆரம்பிச்சடலம் ஆனா எழுத மேட்டர் வேணுமே? எதை பத்தி எழுதலாம் அப்படின்னு இருந்த கொஞ்ச நஞ்ச மூளையையும் வெச்சு யோசிச்ச அப்போ தான் நம்ம குரங்கு புத்தி சூப்பரா வேலை செஞ்சு விலங்குகள் பத்தி எழுதலாம்னு ஒரு ஐடியா குடுத்துச்சு. விலங்குகள் பத்தி ஆராய்ச்சி பண்ணி எழுதற அளவுக்கு தான் நமக்கு ஒண்ணும் பெரிய ஞானம் கிடையாதே அதனால விலங்குகளுடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் விலங்குகள் சார்ந்த சில நிகழ்வுகளும் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். எல்லா விலங்குகளுக்கும் நம்மை போலவே உணர்வுகள் இருக்கு அப்படிங்கறது என்னோட கருத்து. அப்போ ஆடு, கோழி எல்லாம் வெட்டி சாப்பிடும் போது அதோட உணர்வுகள் பத்தி யோசிக்க மாட்டியா அப்படினு கேட்டு மடக்க கூடாது. :) அவைகளும் நம்மில் பலரைப்போல அன்புக்கும், அனுதாபத்துக்கும் ஏங்கி நிற்கின்றன. அவைகளுக்கும் நம்மைபோல போர் அடிக்கும் தருணங்களும் உண்டு. விலங்குகள் மட்டும் இல்லை. செடிகளுக்கும் உணர்வுகள் இருப்பதாக நான் நம்புகிறேன். சில ஆய்வுகள் இது குறித்து கூறுவதாக கேள்வி. ஏதோ சொல்லறேன் , கருத்துக்களை சொல்லுங்கள். நல்லா இருந்தா பப்ளிஷ் பண்ணறேன். நன்றி . வணக்கம்.