எல்லாம் நேரமடா சாமி

என்னுடைய நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார். பல நாட்கள் என்னுடன் அலுவலகத்துக்கு சேர்ந்து செல்லும் பாக்கியம் பெற்றவர். ஆபீஸ் பஸ்சில் போகும் போது என்னுடைய பிளேடு மேட்டர் எல்லாத்தையும் தாங்கிக் கொள்ளும் நல்ல குணம் கொண்டவர். போகும் போது வானில் தென்படும் பறவைகள், தெருவில் தென்படும் நாய், மாடு, கழுதை போன்றவற்றை காட்டி ஏதாவது சொல்லுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொள்ளுவார். ஆனால் இயற்கை , இயற்கையின் அழகு போன்ற விஷயங்களில் அதிகம் ஆர்வம் இல்லாதவர். ஒரு முறை மேலே பறந்து கொண்டிருந்த பெலிகன் பறவையை அவரிடம் காட்டினேன். உற்று பார்த்துவிட்டு என்னை திரும்பி பார்த்து " காக்கா தானே?" அப்படினு கேட்டு ஒரு போடு போட்டார். சில மாதங்களுக்கு அப்பறம் எல்லா அப்பாவிகளைப் போல அவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. ஒரு நாள் எப்போதும் போல பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது திடீர் என்று ஒரு மரத்தைக் காட்டி "சூப்பரா இருக்குல்ல ?" அப்படின்னு சொன்னார். எதுவும் புரியாமல் அவரை பார்த்த போது "அந்த மரத்தோட பூவெல்லாம் பாருங்க, எவ்வளவு அழகா இருக்குன்னு..." அப்படினு சொன்னார். பெலிகனை பார்த்து காக்காவான்னு கேட்ட ஆள் இப்போ நானே கவனிக்காத ஒரு மரத்தோட பூவை எல்லாம் ரசிக்க ஆரம்பிச்சுட்டாரே அப்படினு யோசிச்சேன். எல்லாம் நேரமடா சாமி...

4 comments:

Unknown said...

Excellent.. its gr8 to read..

இம்சை அரசி said...

idhanaala enna solla varinga??? u mean gals life-la vandha rasanai illathavan kooda oru super rasiganayiduvaanuthaana??? gud gud... :)))

 The Serene One said...

Pramaatham, thambi. Romba nalla nagaichuvai unarvu irukku. Melum ethirparkiren.

Lollurasa said...

Arunaaaaaaaaaaaaaaaaaaaaaa.....
You have a smooth flow of writing my friend.
Keep it up.
Athu yarunga Imsai arasi?
Murali