உண்மையா இருககுமோ?

பல வருடங்களுக்கு முன் ரீடர்ஸ் டைஜெஸ்டில் ஒரு விஷயம் வந்திருந்தது. அதாவது எந்த மிருகம் மனிதர்களைப் போலவே குணம் படைத்தது என்று. நாய்கள் மனிதர்களை தங்கள் எஜமனர்களாய்ப் பார்க்குமாம். பூனைகள் தாங்கள் தான் மனிதர்களின் எஜமானர்கள் என்று நினைக்குமாம். பன்றிகள் தான் தங்களை மனிதர்களுக்கு சமம் என்று நினைக்குமாம். எப்படி தான் இதெல்லாம் கண்டு பிடிப்பாங்களோ தெரியாது, ஆனால் இதில் கொஞ்சம் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. நாய்கள் எப்போதும் தெரிந்த நபர்களைப் பார்த்தால் வாலை ஆட்டிக்கொண்டு, கால்களை மேலே போட்டு ஓவர் குஷியாகி விடும். அடித்து விரட்டினாலும் அடுத்த முறை மீண்டும் இதையே தான் செய்யும். அப்படியே கொஞ்சம் பயந்து கொண்டு இப்படி செய்யா விட்டாலும் மீண்டும் கூப்பிடும் போது பழையதை எல்லாம் மறந்து விட்டு அப்படியே தான் செய்யும். ஆனால் பூனைகள் அப்படி இல்லை. நாம் எவ்வளவு தான் கூப்பிட்டாலும் அவைகளுக்கு தோன்றும் போது தான் நம்மிடம் வரும். மற்ற நேரங்களில் "நீ எல்லாம் ஒரு மனுஷனா?" என்று கேட்பது போல பார்த்து விட்டு போய் விடும். சற்றும் எதிர்பாராத வேளையில் ஒரு சின்ன மியாவ் போட்டு நம் கால்களை உரசி சென்று என்னமோ நம் மேல் ரொம்ப பாசம் இருப்பது போல் பாவ்லா பண்ணி விட்டு போகும். ( நிஜ) பன்றிகளிடம் அதிகம் ஒட்டி உறவடியதில்லை, அதனால் அவை எப்படி என்று தெரியாது. கடைசி சில நாட்களாக ஆபீசில் டேமஜெர்களிடம் சிக்கி நாய் படாத பாடு படும் போது ஏனோ பூனைகள் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

0 comments: