மனிதக் குரங்கின் தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் நேரமாச்சே, எல்லாக் கட்சிகளும் வாக்குறுதிகளை சும்மா அள்ளி விட்டுக்கிட்டு இருக்காங்க. டிவி போய் லேப்டாப் வந்துடுச்சு. ஆஹா நம்ம தமிழகம் எவ்வளவு வேகமா விஞ்ஞான வளர்ச்சி அடஞ்சிகிட்டிருக்கு. அதை விட என்னை மிகவும் கவர்ந்த வாக்குறுதிகள் எல்லாம் நம்ம சொந்தங்களை பற்றியது தான். அதாங்க, இலவசமா ஆடு, மாடு எல்லாம் குடுக்க போறாங்களாம். சரி போன தடவை நம்ம பேருல எவனும் டிவி யை வாங்கிட்டு போயிடக் கூடாதுன்னு டிவியை வாங்கிட்டு வந்து வெச்சுட்டோம். இந்த தடவை ஆடு மாடு எல்லாம் வாங்கி எங்க வெக்கறது? சரி, எது எப்படியோ ஆகட்டும் நானும் மனிதக் குரங்கு முன்னேற்ற கழகம் ஆரம்பிக்க்கறதுனு முடிவு பண்ணிட்டேன். வாக்குறுதிகள் எல்லாம் ரெடி இனி குரங்குகளை சேக்க வேண்டியது தான் பாக்கி . நம்ம வாக்குறுதிகள் எதுவும் லேப்டாப், பஸ் பாஸ் இந்த மாதிரி எல்லாம் இருக்காது. முற்றிலும் இயற்கை சார்ந்த விஷயங்கள் தான்
1 . தண்ணீர் வசதி உள்ள கிராமப்புற மக்களுக்கு வீட்டுக்கு ஒரு நீர் யானை கொடுப்போம்
2 . தண்ணீர் வசதி கம்மியாக இருக்கும் கிராமங்களில் வீட்டுக்கு ஒரு ஒட்டகம் கொடுப்போம்
3 . தண்ணீர் வசதியைப் பொறுத்து வீட்டுக்கு ஒரு திமிங்கலம், சுறா மீன், வஞ்சிரம் இல்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு கோல்ட் பிஷ் கொடுப்போம்
4 . விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய உதவியாக வீட்டுக்கு ஒரு யானை கொடுப்போம்
5 . கிராம மற்றும் நகர மக்களுக்கு வீட்டு காவலுக்கு நாய்கள் கொடுப்போம்
6 . பத்து வயதுக்கு உள்பட்ட சிறார்களுக்கு பொமரேனியன் நாய்களும், பத்து வயது மேற்பட்ட சிறுவர்களுக்கு அல்சேஷன் நாய்களும் கொடுப்போம்
7 . மின் பற்றாக்குறை காரணமாக இருட்டில் மூழ்கி இருக்கும் கிராமங்களில் லைட் வசதி செய்து கொடுப்பதற்காக மின் மினி பூச்சி பண்ணைகள் அமைப்போம்

இதெல்லாம் கற்பனை தான் ஆனால் ஒன்னு மட்டும் உண்மை. இன்னும் சில வருடங்களில் நம்ம மக்களுக்கு அறிவு புகட்ட வீட்டுக்கு ஒரு மனிதக் குரங்கு கொடுக்க வேண்டி இருக்கும்

0 comments: